சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று (செப்.28) கனமழை பெய்தது. இதன் காரணமாக பல்வேறு இடங்கள் மற்றும் சாலைகளில் மழை நீரானது தேங்கிய வண்ணமாக இருந்தது. இதனால் நடந்து செல்பவர்களும், வாகனத்தில் செல்பவர்களும் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். மாநகராட்சி ஊழியர்கள் அதனை அப்புறப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வரும் பகுதிகள் மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளில் விபத்துகள் ஏற்படாமல் தவிர்க்க தடுப்புகள் அமைப்பது, எச்சரிக்கை பலகைகள் அமைப்பது என உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.