சென்னையில் இருந்து மும்பைக்கு காலை 5:00 மணிக்கு தனியார் விமானம் புறப்பட இருந்தது. 213 பயணிகள் அந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்தனர். விமானி இல்லாத நிலையில், சுமார் 8 மணி நேரத்திற்குமேல் விமானம் புறப்பட தாமதம் ஆனது.
இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் விமானத்திற்குள்ளேயே போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து, பிற்பகல் 1.20 மணிக்கு விமானம் மும்பைக்கு புறப்பட்டுச் சென்றது.
இதுதொடர்பாக விமான நிலைய அலுவலர்களிடமும் பயணிகள் புகாா் செய்துள்ளனா்.