தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 26, 2019, 2:54 PM IST

ETV Bharat / state

மருந்துவப் படிப்பு ஆள்மாறாட்ட விவகாரம்: விளக்கம் கேட்டு கடிதம்!

சென்னை: கோவை பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் இரண்டு மாணவர்களின் புகைப்படத்தில் வேறுபாடு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து மத்திய சுகாதாரத் துறை தேசிய தகுதி முகமைக்கு தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் என கடிதம் எழுதியுள்ளதாக தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சுதா சேஷய்யன் தெரிவித்துள்ளார்.

chennai mgr medical university vc

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பி.எஸ்.சி. மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த இரண்டு மாணவர்களின் புகைப்படத்தில் மாற்றம் உள்ளது என சந்தேகிப்பதாகக் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் அது குறித்து மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக் குழுதான் தெளிவாக விளக்க வேண்டும்.

மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கும் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக் கழகத்திற்கும் நேரடியாக எந்தவிதத் தொடர்பும் கிடையாது. மருத்துவப் படிப்பில் சேர்ந்த மாணவர்களில் விவரங்கள் மருத்துவக் கல்லூரிகளில் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கு அளிக்கப்படும். அதனை நாங்கள் சரிபார்த்த பின்னரே அந்த மாணவர் மருத்துவப் படிப்பில் சேர்ந்ததாக அறிவிக்கப்படுவார்கள்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் மாணவர்கள் சேர்ந்த விவரங்களைச் சரிபார்த்து அளிக்க வேண்டும் என ஏற்கனவே அறிவித்திருந்தோம். அதனடிப்படையில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்களில் எந்தவித பிரச்னையும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சுதா சேஷய்யன்

இதில் தேனி மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த மாணவன் மட்டுமே முறைகேடாக சேர்ந்ததாகக் கண்டறியப்பட்டுள்ளது. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கோவை பிஎஸ்ஜி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த மாணவர் மட்டுமே புகைப்படத்தில் வேறுபாடு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தாண்டு இதுபோன்ற பிரச்னை எழுந்துள்ளதால் மாணவர்களின் பெயர்களை பதிவு செய்வதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு கூடுதல் ஆவணங்களை சரிபார்க்கலாம் என்பது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும்.

சந்தேகத்திற்கான மாணவர்கள் குறித்து மருத்துவக் கல்வி இயக்ககம், மாணவர்களின் ஆவணங்கள் உண்மை என உறுதியளித்த பின்னரே அவர்களுக்கு மருத்துவக் கல்வியில் பதிவு செய்யப்படும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க :நீட் ஆள்மாறாட்ட விவகாரம்; தமிழ்நாடு அரசு விளக்கமளிக்க நீதிமன்றம் உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details