இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம்:
வளிமண்டல மேலடுக்குச் சுழற்சிக் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் ஆங்காங்கே மழைபெய்து வருகிறது. வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக மட்டுமல்லாமல் வரும் மாதங்களில் வடகிழக்குப் பருவமழை தொடங்கவுள்ளதால் அடுத்தமாதம் முதல் இரண்டு வாரங்கள்வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ளது.
மேலும், தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை இயல்பான அளவை ஒட்டியே இருக்கும். குறிப்பாக, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளது.
மேலும் படிங்க:
'தொடர்ந்து 4 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு' - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை