தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'வரும் 17ஆம் தேதி வடகிழக்குப் பருவமழைத் தொடங்க வாய்ப்பு' - வானிலை ஆய்வு மையம்! - வானிலை ஆய்வு மையம்

சென்னை : வட கிழக்குப் பருவமழை வருகின்ற அக்டோபர் 17ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

chennai meteorological center press meet

By

Published : Oct 13, 2019, 7:05 PM IST

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், 'நாட்டில் தென்மேற்குப் பருவமழை வடக்கு, மத்தியப் பகுதிகளில் இருந்து படிப்படியாக விலகி விட்டது. இதைத் தொடர்ந்து வரும் அக்டோபர் 17ஆம் தேதி வடகிழக்குப் பருவ மழைத் தொடங்க வாய்ப்புள்ளது எனவும், கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு, புதுவையில் வெப்பச்சலனம் காரணமாக ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது எனவும் தெரிவித்தார்.

மேலும் அவர், 'அதிகபட்சமாக கோபிச்செட்டிபாளையத்தில் 13 செ.மீ மழை பெய்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு, புதுவையில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் எனவும், வட தமிழகத்தில் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையைப் பொறுத்தவரை நகரின் சிலப்பகுதியில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது' எனவும் தெரிவித்தார்.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் செய்தியாளர் சந்திப்பு!

ABOUT THE AUTHOR

...view details