தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கிராமப்புற பட்டியலின மக்களின் ஆரோக்கியத்தை கண்காணிக்கும் சென்னை ஐஐடி செயலி

கிராமப்புற பட்டியலின மக்களின் ஆரோக்கியத்தை கண்காணிக்கவும் மேம்படுத்தவும் தகவல் தொழில்நுட்பக் செயலியை சென்னை ஐஐடி உருவாக்கியுள்ளது.

By

Published : Nov 19, 2022, 7:39 AM IST

கிராமப்புற பட்டியலின மக்களின் ஆரோக்கியத்தை கண்காணிக்கும் சென்னை ஐஐடி ஐடி கருவி
கிராமப்புற பட்டியலின மக்களின் ஆரோக்கியத்தை கண்காணிக்கும் சென்னை ஐஐடி ஐடி கருவி

சென்னை: ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் கிராமப்புற பட்டியலின மக்களின் ஆரோக்கியத்தைக் கண்காணிக்கவும் மேம்படுத்தவும் தகவல் தொழில்நுட்பக் கருவியை சென்னை ஐஐடி உருவாக்கியுள்ளது. ஓபன் சோர்ஸ் மென்பொருளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஐடி செயலி விரிவான குடும்ப அளவிலான வருடாந்திர ஆரோக்கியம் தொடர்பான தகவல்களை சேகரிக்கும் நோக்கில் செயல்படுத்தப்பட்டது.

மருத்துவ சிகிச்சை மற்றும் முன்னுரிமை சுகாதாரப் பிரச்சனைகளில் உணவு ஆலோசனையின் தாக்கம் ஆகியவை குறித்து புறநிலை மதிப்பீடு செய்வதற்காக இந்த 'ஐடி டூல்' பயன்படுத்தப்பட்டது. சிகிச்சையின் செயல்திறன் மற்றும் செலவுகளின் அடிப்படையில் உகந்த கிராமப்புற சுகாதாரத் திட்டம் ஒன்றை உருவாக்க இது வழிவகுக்கும்.

சித்தூர் மாவட்டத்தில் பகஜா மற்றும் புலிசேர்லா மண்டல்களில் இ.பாலகுட்டப்பள்ளி எஸ்சி மற்றும் அதனை ஒட்டி குக்கிராமங்களில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது. வீட்டிற்கு 5 அல்லது 6 பேர் என சுமார் நூறு பட்டியலின குடும்பங்கள் இங்கு வசித்து வருகின்றன.

கடந்த காலங்களில் இங்குள்ள மக்கள் கேழ்வரகு மற்றும் தினை வகைகள், பால் பொருட்கள், மீன் போன்ற நீர்வாழ் இறைச்சியை உணவாகக் கொண்டிருந்தனர்.

கிராமப்புற பட்டியலின மக்களின் ஆரோக்கியத்தை கண்காணிக்கும் சென்னை ஐஐடி ஐடி கருவி

வறுமை காரணமாக பருப்பு, பால் பொருட்கள், இறைச்சி உள்ளிட்டவை ஏதுமின்றி வறண்டு போன மோசமான உணவை இங்குள்ள மக்கள் தற்போது உட்கொண்டு வருகின்றனர். இதனால் பெண்கள், குழந்தைகள் ரத்தசோகையால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். நிபுணத்துவம் பெற்ற சுகாதாரப் பயிற்சியாளர்கள் இந்த அறிகுறிகளைக் கண்டறிந்து உரிய உணவு ஆலோசனைகளை வழங்கினர்.

சென்னை ஐஐடியின் அப்ளைடு மெக்கானிக்ஸ் துறையின் பேராசிரியர் சி.லட்சுமண ராவ் கூறும்போது, சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்ட கிராமங்களில், ஐடி டூல்ஸ் களைக் கொண்டு சுகாதார நிலை மற்றும் உடல்நலத்திற்கான செலவினங்கள் ஆகியவை குறித்த விரிவான அடிப்படைக் கணக்கெடுப்பு நடைபெற்றது.

மருத்துவ சிகிச்சை அளித்தல் உணவு ஆலோசனை வழங்குதல் மற்றும் அவற்றைக் கண்காணித்தல் ஆகியவற்றுக்கு ஐடி டூல்ஸ் கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

கிராமப்புற பட்டியலின மக்களின் ஆரோக்கியத்தை கண்காணிக்கும் சென்னை ஐஐடி ஐடி கருவி

டிஜிட்டல் மயமாக்குவதற்கும், சிறந்த முறையில் பகுப்பாய்வு செய்வதற்கும் ஏற்ற வகையில் மொபைல் செயலி பயன்பாட்டை அமல்படுத்துதல், உள்ளூரைச் சேர்ந்த தன்னார்வ இளைஞர்களின் உதவியுடன் மொபைல் செயலியின் பயன்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது, ரத்தசோகை மற்றும் பலவீனம் போன்ற குறிப்பிட்ட நோய்களுக்கு உரிய பிரத்யேக மருந்து கண்டுபிடிப்புக்கான முயற்சிகளை மேற்கொள்ளுதல், மருத்துவ முகாம்களின் ஒரு பகுதியாக நோயாளிகளை ஒழுங்கமைத்துக் கண்காணிப்பதுடன் ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை மேற்கொள்ள ஊக்கப்படுத்துதல், ஆகியவற்றை பயன்படுத்தி கிராமீன் ஆயுர்வேதா மொபைல் செயலியை உருவாக்கி உள்ளனர்.

இது ஒரு நபரின் ஒட்டுமொத்த சுகாதாரத் திட்டத்தை ஆண்ட்ராய்டு முறையில் புதுமையாக பயன்படுத்துவதாகும். ஆன்லைனில் மருத்துவர்களின் சந்திப்புக்கான நேரம் ஒதுக்கச் செய்தல், டிஜிட்டல் வடிவில் காப்புரிமை தரவைப் பராமரித்தல் ஆகியவற்றுக்கு இந்த மொபைல் செயலி பயன்படுவதுடன், நோயாளியின் உடல்நிலை மற்றும் சிகிச்சை பதிவுகளைக் கண்காணிக்கவும் உதவுகிறது. தேவைப்படும் பட்சத்தில் நோயாளிகளை வழக்கமான மறுபரிசோதனைக்கு நினைவூட்டலும் செய்யப்படும்.

இதையும் படிங்க:பிரியா மரண விவகாரம்: கவனக்குறைவாக செயல்பட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை

ABOUT THE AUTHOR

...view details