தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வீட்டின் கதவை வெட்டி, உள்நுழைந்து ரூ. 20 சவரன் நகைகள், பணம் கொள்ளை - காவல்துறையினர் விசாரணை

சென்னை: தாம்பரம் அடுத்துள்ள நெடுங்குன்றத்தில் வீட்டின் பீரோவில் இருந்த 20 சவரன் தங்க நகைகள் மற்றும் 20 ஆயிரம் ரூபாய் பணம் அடையாளம் தெரியாத நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது.

கொள்ளையடிக்கப்பட்ட வீடு
கொள்ளையடிக்கப்பட்ட வீடு

By

Published : Jan 28, 2020, 1:36 PM IST

சென்னை - தாம்பரத்தை அடுத்துள்ள நெடுங்குன்றத்தைச் சேர்ந்தவர் துரைமுருகன் (35). இவர் கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

கடந்த வெள்ளிக்கிழமை உறவினர் திருமணத்திற்காக குடும்பத்தினருடன் வெளியூர் சென்றுள்ளார். இன்று காலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உடனே உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 20 சவரன் தங்க நகைகள் மற்றும் 20 ஆயிரம் ரூபாய் பணத்தை அடையாளம் தெரியாத நபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.

இச்சம்பவம் குறித்து பெருங்களத்தூர் பீர்க்கன்காரணை காவல்துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொள்ளையடிக்கப்பட்ட வீடு

இதையும் படிங்க:

ரஜினி குறிப்பிட்ட 'அந்த' ஊர்வல செய்தியை மீண்டும் பிரசுரித்த துக்ளக்!

ABOUT THE AUTHOR

...view details