சென்னை:தமிழ்நாடு வனப்பகுதிகளை ஆக்கிரமித்துள்ள அன்னிய மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்கு, நீதிபதிகள் பாரதிதாசன் மற்றும் சதீஷ்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது காணொலி காட்சி மூலம் ஆஜராகியிருந்த தமிழ்நாடு வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹு, அன்னிய மரங்களை அகற்றுவது தொடர்பான வரைவு கொள்கை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும், மத்திய பிரதேசம், தெலங்கானா, கர்நாடகா, கேரளா, குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் தமிழ்நாடு வனத்துறையினர் இதுசம்பந்தமாக ஆய்வு செய்ய உள்ளதாகவும் குறிப்பிட்டார்.