தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விபத்தில் உயிரிழந்த ஐ.டி. பொறியாளர் குடும்பத்திற்கு இரண்டரை கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவு! - chennai high court order

சென்னை: வாகன விபத்தில் உயிரிழந்த ஐ.டி. பொறியாளர் குடும்பத்துக்கு இரண்டு கோடியே 54 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும் என காப்பீட்டு நிறுவனத்துக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

chennai-high-court-order-to-give-the-compensation-amount-of-two-crore-to-the-accident-family

By

Published : Sep 27, 2019, 7:41 AM IST

2009ஆம் ஆண்டு ஏற்பட்ட வாகன விபத்தில் பொறியாளர் வெங்கட் ராகவன் உயிரிழந்தார். இது தொடர்பாக காப்பீட்டு நிறுவனத்தின் மீது போடப்பட்ட வழக்கை விசாரித்த திருப்பூர் மாவட்ட வாகன விபத்துகளுக்கான நீதிமன்றம் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடாக மூன்று கோடியே 78 லட்சம் ரூபாயை காப்பீட்டு நிறுவனம் வழங்க உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து காப்பீட்டு நிறுவனம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், அப்துல் குத்தூஸ் அமர்வு, உயிரிழந்தவரின் வயது, மாதச் சம்பளம், குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை மற்றும் விபத்துக்கான காரணங்களை ஆராய்ந்து மூன்று கோடியே 78 லட்சத்து 84 ஆயிரத்து 640 ரூபாயை காப்பீட்டு நிறுவனம் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதில், உயிரிழந்தவரின் குடும்பத்துக்கான எதிர்கால செலவுகள் அதிகரித்தது, வாகன கட்டுப்பாட்டை இழந்ததை கீழமை நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை. அதனால் கீழமை நீதிமன்றம் விதித்த மூன்று கோடியே 78 லட்சத்தை 84 ஆயிரம் 640 ரூபாய் வாகன விபத்து இழப்பீட்டுத் தொகையை இரண்டு கோடியே 54 லட்சத்து 81 ஆயிரம் 869 ரூபாயாக குறைத்து வழங்க உத்தரவிடப்பட்டது.

மேலும், நீதிமன்றத்தில் குறைக்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையை காப்பீட்டு நிறுவனம் வைப்புத்தொகை செய்து உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு நிரந்தர வைப்பாக மாற்றி வழங்க வேண்டும் எனக் காப்பீட்டு நிறுவனத்திற்கு உத்தரவிட்டு வழக்கைத் தள்ளுபடி செய்தனர்.

ABOUT THE AUTHOR

...view details