தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 22, 2021, 9:02 PM IST

ETV Bharat / state

State Press Council அமைக்க சட்டவிதிகள் உள்ளதா? - இந்திய பிரஸ் கவுன்சிலுக்கு நீதிமன்றம் கேள்வி

மாநில பிரஸ் கவுன்சில்கள் அமைக்கச் சட்டங்கள் உள்ளனவா என இந்திய பிரஸ் கவுன்சில் விளக்கமளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மாநில பிரஸ் கவுன்சில் அமைக்க சட்டவிதிகள் உள்ளதா..? : இந்திய பிரஸ் கவுன்சில் விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்
தமிழ்நாட்டில் மாநில பிரஸ் கவுன்சில் அமைக்க சட்டவிதிகள் உள்ளதா..? : இந்திய பிரஸ் கவுன்சில் விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

சென்னை:சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அலுவலராகப் பணியாற்றியபோது, பொன். மாணிக்கவேல் தவறான அறிக்கைகளைத் தாக்கல் செய்தது குறித்து தனிப்படை அமைத்து விசாரிக்கக் கோரி, சென்னையைச் சேர்ந்த சேகர்ராம் என்பவர் பத்திரிகையாளர் எனக் கூறி வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணையின்போது சேகர் ராம் போலி பத்திரிகையாளர் என பொன்.மாணிக்கவேல் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.

இதன் அடிப்படையில் வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் அடங்கிய அமர்வு, உச்ச நீதிமன்ற அல்லது உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில், மூத்தப் பத்திரிகையாளர்கள், அரசு அலுவலர்கள், காவல் துறை அலுவலர்கள் அடங்கிய 'தமிழ்நாடு பிரஸ் கவுன்சில்', என்ற அமைப்பை 3 மாதங்களில் ஏற்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டனர்.

தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் மட்டுமே பத்திரிகையாளர் சங்கங்களுக்குத் தேர்தல் நடத்த வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் மூலமாக மட்டுமே பத்திரிகையாளர்களுக்கு வீட்டுமனை, இலவச பஸ் பாஸ் உள்ளிட்ட சலுகைகள் வழங்க வேண்டுமே தவிர, நேரடியாக வழங்கக் கூடாது எனவும் உத்தரவிட்டனர்.

இந்த உத்தரவுகளை அமல்படுத்தியது தொடர்பான அறிக்கையைத் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருந்தனர்.

இந்திய பிரஸ் கவுன்சில் விளக்கமளிக்க அறிவுறுத்தல்

அதன்படி, இந்த வழக்குப் பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, 'தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் அமைக்க விதிகள் உள்ளனவா?' என்றும், மத்திய அரசு சட்டப்படி இந்திய பிரஸ் கவுன்சிலுக்கே அதிகாரம் உள்ளது என்றும் குறிப்பிட்ட நீதிபதிகள், மாநில பிரஸ் கவுன்சில்கள் அமைக்கச் சட்டங்கள் உள்ளனவா..? எனத் தெரிவிக்கும்படி, இந்திய பிரஸ் கவுன்சில் தரப்பு வழக்கறிஞருக்கும், மனுதாரர் மற்றும் பிற வழக்கறிஞர்களுக்கும் அறிவுறுத்தினர்.

சட்டம் இல்லாமல் கவுன்சில் அமைக்க முடியாது என்பதால், உத்தரவை மறு ஆய்வு செய்யத் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், விசாரணையை அடுத்த மாதத்துக்குத் தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க:10 மாதத்தில் ஐந்தாயிரம்...! சென்னை விமான நிலைய சரக்குப்பிரிவு புதிய சாதனை

ABOUT THE AUTHOR

...view details