தமிழ்நாடு

tamil nadu

ஆவணங்களை அரசிடம் ஒப்படைக்க பொன். மாணிக்கவேலுக்கு அறிவுறுத்திய நீதிமன்றம்!

சென்னை: உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சிலைக்கடத்தல் விசாரணை தொடர்பான ஆவணங்களை, தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க பொன். மாணிக்கவேலுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

By

Published : Dec 6, 2019, 6:10 PM IST

Published : Dec 6, 2019, 6:10 PM IST

chennai HC orderd to pon manickavel to hand over the idol abduction document to Tamilnadu Government
chennai HC orderd to pon manickavel to hand over the idol abduction document to Tamilnadu Government

சிலைக்கடத்தல் தொடர்பான வழக்குகளில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக் கூறி, சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அலுவலராக இருந்த பொன். மாணிக்கவேல், தமிழ்நாடு அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதேபோல, தனது பதவிக்காலம் கடந்த நவ. 30ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், அதனை நீட்டிக்க உத்தரவிடக் கோரி பொன். மாணிக்கவேல், டிராபிக் ராமசாமி ஆகிய இருவரும் ஏற்கனவே தொடர்ந்த வழக்குகள் இன்று நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

இதற்கிடையே சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.யாக பொன். மாணிக்கவேலை மீண்டும் நியமிக்கக்கோரி தான் தாக்கல் செய்துள்ள மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று யானை ராஜேந்திரன் முறையிட்டார்.

அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சிலைக்கடத்தல் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை விசாரிக்க உச்ச நீதிமன்றம் தடைவிதித்துள்ளதால், இந்த வழக்குகளில் உயர் நீதிமன்றம் எந்த உத்தரவுகளையும் பிறப்பிக்கக் கூடாது என்று கேட்டுக் கொண்டார்.

மேலும், பொன். மாணிக்கவேல் தன்னிச்சையாக செயல்பட்டதோடு இல்லாமல் அரசுக்கு இதுவரை எந்த ஒத்துழைப்பும் அவர் நல்கவில்லை என்று குற்றஞ்சாட்டிய அரசுத் தரப்பு வழக்கறிஞர், ஏற்கனவே அவருக்குப் பணி நீட்டிப்பு வழங்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதால், அவரை மறு நியமனம் செய்ய முடியாது எனவும் விளக்கமளித்தார்.

இதையடுத்து, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சிலைக்கடத்தல் விசாரணை தொடர்பான ஆவணங்களை தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க பொன். மாணிக்கவேலுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்குகள் முடியும்வரை, இந்த வழக்குகளில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று தெரிவித்தனர். மேலும் பொன். மாணிக்கவேல் தனது தரப்பு வாதங்களை எழுத்துப் பூர்வமாகத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு நீதிபதிகள் விசாரணையை ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: பொன். மாணிக்கவேலிடமிருந்து ஆவணங்கள் வரவில்லை - புதிய ஐஜி அன்பு

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details