தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'பருவம் தவறிய மழையால் விளைபொருள்கள் வீணாவதைத் தடுக்க வேண்டும்' - paddy loss due to rain

எதிர்காலத்தில், பருவம் தவறிய மழையால் விளைபொருள்கள் வீணாவதைத் தடுக்க, நேரடி கொள்முதல் நிலையங்களில் நிரந்தரக் கட்டுமானங்களை அமைக்க வேண்டும் எனத் தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

உயர் நீதிமன்றம் அறிவுரை
உயர் நீதிமன்றம் அறிவுரை

By

Published : Jul 17, 2021, 8:39 PM IST

சமீபத்தில் தென் மாவட்டங்களில் பெய்த மழையில் விளைபொருள்கள் மழையில் நனைந்து வீணானது குறித்து ஆங்கில நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்றம், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

மேலும், அதிகளவில் சாகுபடி நடக்கும் பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் மையங்கள் தொடங்குவது குறித்து விளக்கமளிக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, தமிழ்நாடு அரசின் விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத் துறைச் செயலாளர் தாக்கல்செய்த அறிக்கையில், "நெல் கொள்முதலுக்காக 468 குடோன்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் மூன்று லட்சத்து 34 ஆயிரம் டன் நெல்லை பாதுகாக்க முடியும். அவை படிப்படியாக மேம்படுத்தப்படும்.

மேலும், விவசாயிகளின் விளைநிலங்களுக்கே சென்று வேன் மூலம் நெல் கொள்முதல் செய்யும் வகையில், நடமாடும் கொள்முதல் நிலையங்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுதவிர பல இடங்களுக்கு அலுவலர்களுடன் அமைச்சர் சென்று ஆய்வுசெய்துள்ளார்" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தமிழ்நாடு அரசின் அறிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், எதிர்காலத்தில் பருவம் தவறி பெய்யும் மழையில் விளை பொருள்கள் வீணாகாமல் பாதுகாக்க நேரடி கொள்முதல் நிலையங்களில், நிரந்தர கட்டுமானங்கள் அமைப்பது குறித்து அரசு யோசிக்க வேண்டும் என ஆலோசனை கூறி, வழக்கை முடித்துவைத்தனர்.

இதையும் படிங்க:நீட் தேர்வுக்கு 87.1% பேர் எதிர்ப்பு - கருத்துக்கணிப்பில் தகவல்

ABOUT THE AUTHOR

...view details