தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 7, 2019, 9:18 AM IST

ETV Bharat / state

மலேசியாவிலிருந்து கடத்திவரப்பட்ட ரூ.24 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்!

சென்னை: மலேசியாவிலிருந்து சென்னைக்கு கடத்திவரப்பட்ட ரூ.24 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்கத் துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

gold smuggling

மலேசியாவிலிருந்து சென்னை வந்த பயணி ஒருவர் மீது சந்தேகமடைந்த சுங்க அலுவலர்கள் அவரை விசாரித்துள்ளனர். அப்போது, அவர் முன்னுக்குப்பின் முரணாகப் பதிலளித்ததால் உடமைகளைச் சோதனை செய்தனர்.

தொடர்ந்து, அவர் வைத்திருந்த ஐந்து கையடக்க வானொலிகளை (ரேடியோ) பிரித்துப் பார்த்தபோது அதில் 235 கிராம் எடைகொண்ட தங்கக்கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர். சுமார் ஒன்பது லட்சத்து 26 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள இந்தத் தங்கக் கட்டிகளைக் கைப்பற்றிய சுங்க அலுவலர்கள் அதனைக் கடத்திவந்த சென்னையைச் சேர்ந்த முகமது யூசப்பை (29) கைது செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட தங்கக் கட்டிகள்
அதேபோன்று, கமலா (52) என்ற பயணி மீது சந்தேகமடைந்த சுங்கத் துறையினர் அவரை தனியறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தனர். இந்தச் சோதனையில் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்துவைத்து கடத்திவந்ததைக் கண்டுபிடித்தனர்.இவரிடமிருந்து 15 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 385 கிராம் தங்கத்தைக் பறிமுதல் செய்தனர்.

இதன்மூலம், நேற்று ஒரேநாளில் 24 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 620 கிராம் எடைகொண்ட தங்கத்தை சுங்கத் துறையினர் கைப்பற்றியுள்ளனர். மேலும், கடத்தல் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: Trichy Gold Heist : லலிதா ஜுவல்லரியில் கொள்ளை: வடமாநில இளைஞர்கள் 5 பேரிடம் விசாரணை

ABOUT THE AUTHOR

...view details