தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 3, 2019, 4:56 PM IST

ETV Bharat / state

தொடரும் ரயில் படிக்கட்டு பயணம் - தெற்கு ரயில்வே எச்சரிக்கை!

சென்னை: "மின்சார ரயிலில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தெற்கு ரயில்வே

சென்னையில் தினமும் ஏராளமான மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து வேலைக்கு செல்பவர்களில் பெரும்பாலோனோர் இந்த மின்சார ரயில்களையே பெரிதும் பயணம் செய்கின்றனர். காலை நேரத்தில் கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள் குறித்த நேரத்திற்கு செல்ல வேண்டும் என்ற அவசரத்தில் ரயிலில் ஏறுவதற்கு முந்தி அடித்து செல்கின்றனர். இதனால், படிக்கட்டில் தொங்கியபடி பலர் பயணித்து வருகிறார்கள்.

2018ஆம் ஆண்டு பரங்கிமலை அருகே புறநகர் விரைவு ரயிலில் படிக்கட்டில் தொங்கி சென்ற 4 பேர் தடுப்பு சுவரில் மோதி உயிரிழந்தனர். கோர விபத்து ஏற்பட்ட போதிலும் சென்னை கடற்கரை - தாம்பரம், தாம்பரம் - செங்கல்பட்டு மார்க்கத்தில் செல்லும் மின்சார ரயில்களில் தொடர் ரயில் படிக்கட்டு பயணம் தொடர்கிறது.

எனவே, பயணிகளை தங்களது பைகளோடு ஆபத்தான வகையில் படிக்கட்டுகளில் தொங்கி கொண்டு பயணம் செய்ய வேண்டாம். அதனை மீறும் பயணிகள் மீது ரயில்வே சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனை விதிக்கப்படும் என்று தெற்கு ரயில்வே எச்சரித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details