தமிழ்நாடு

tamil nadu

சென்னையில் இன்று 382 கரோனா பரிசோதனை முகாம்கள்!

By

Published : Aug 30, 2020, 10:56 PM IST

சென்னை உள்ள 15 மண்டலங்களில் இன்று (ஆக. 30) 382 மருத்துவ முகாம்கள் நடைபெற்றன.

medical camp
medical camp

சென்னையில் திருவிக நகர், அண்ணா நகர், அடையாறு போன்ற இடங்களில் கரோனா தொற்று அதிகமாக பரவி வருகிறது. இருப்பினும் குணமடைந்தவரின் விழுக்காடும் அதற்கு சரி சமமாக உள்ளது. இந்த நோய்த் தொற்றை குறைப்பதற்காக மாநகராட்சியும், சுகாதாரத்துறையும் தினமும் பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்குவது, கபசுர குடிநீர் வழங்குவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, தினமும் சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகின்றன. மே 8ஆம் தேதி முதல் தற்போது வரை மாநகராட்சி சார்பில் மொத்தம் 40 ஆயிரத்து 244 மருத்துவ முகாம்கள் நடைபெற்றுள்ளன. அதில் 21 லட்சத்து 65 ஆயிரத்து 99 நபர்கள் பரிசோதிக்கப்பட்டு உள்ளனர்.

சென்னையில் மொத்தம் 85 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களில் 20 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட மக்களுக்கு மருத்துவ முகாம்கள் மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், மருத்துவ முகாம்கள் மூலம் கரோனா பாதித்த 20 ஆயிரத்து 904 நபர்களை மாநகராட்சி கண்டறிந்துள்ளது.

இன்று (ஆக. 30) மட்டும் 382 மருத்துவ முகாம்கள் நடைபெற்றன. அதிகபட்சமாக தேனாம்பேட்டையில் 47, திருவிக நகரில் 44 மருத்துவ முகாம் நடைபெற்றது. அதில், மொத்தம் 11 ஆயிரத்து 850 நபர்கள் பரிசோதிக்கப்பட்டனர். 48 நபர்களுக்கு அறிகுறி இருந்ததால் அருகில் உள்ள கரோனா பரிசோதனை மையத்துக்கு அழைத்துச் சென்றனர். மீதமுள்ள நபர்களுக்கு நோய்க்கு ஏற்ற மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன.

இதையும் படிங்க:கரோனா தொற்று பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம்

ABOUT THE AUTHOR

...view details