தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா பரிசோதனை செய்பவர்களுக்கு புதிய படிவம்! - கரோனா பரிசோதனை செய்பவர்களுக்கு புதிய படிவம்

சென்னை: கரோனா பரிசோதனை செய்து கொள்ளும் வரும் நபர்களுக்காக புதிய படிவத்தை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

Chennai corporation introduce new form for corona virus testers
Chennai corporation introduce new form for corona virus testers

By

Published : Jun 9, 2020, 1:52 AM IST

கரோனா வைரஸ் சென்னை முழுவதும் அதிதீவிரமாக பரவி வருகிறது. தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த பரவலைத் தடுக்க மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் நோய் தாக்கம் குறையாமல் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

இந்த நிலையில் 10 அரசு ஆய்வகங்களும் 13 தனியார் ஆய்வுகளும் என 23 கரோனா ஆய்வகங்கள் சென்னையில் கரோனா பரிசோதனை செய்துவருகிறது. இந்த ஆய்வகங்களில் கரோனா பரிசோதனை செய்து கொள்ள வரும் நபர்கள் தங்கள் முழு விவரத்தையும் கொடுக்க வேண்டும். ஆனால் கரோனா சோதனை செய்துகொள்ளும் சிலர் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்த நேரிடும் என்பதற்காக கைபேசி எண்ணையும் முகவரியையும் தவறாக கொடுப்பதாக கூறப்படுகிறது. இதனால் ஜூன் மூன்றாம் தேதி மாநகராட்சி கரோனா பரிசோதனை செய்வதற்கு ஆதார் அட்டையை கட்டாயமாக்கியது.

இந்த நிலையில் கரோனா பரிசோதனை செய்து கொள்ள வரும் நபர்களுக்காக புதிய படிவத்தை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

https://rb.gy/pshmz5

கரோனா பரிசோதனை செய்து கொள்வதற்கு முன்பாக இந்தப் படிவத்தினை முழுமையாக நிரப்ப வேண்டும். இதையடுத்து, மாநகராட்சி ஊழியர்கள் கரோனா உறுதிசெய்யப்பட்டவர்களையும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும் எளிதில் கண்டறிந்து அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை அளிக்க எளிமையாக இருக்கும் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சியால் அங்கீகாரம் பெற்ற அனைத்து கரோனா பரிசோதனை ஆய்வாளர்களும் ஒருவருக்கு கரோனா பரிசோதனை செய்வதற்கு முன்பு இந்தப் படிவத்தை கட்டாயம் நிரப்பி சென்னை மாநகராட்சிக்கு அனுப்ப வேண்டுமென மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details