தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கல்லூரியில் தடுப்பூசி செலுத்தி இருப்பதை 100% உறுதி செய்ய வலியுறுத்தல் - அனைத்து கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள், டீன்கள் மற்றும் பதிவாளர்களுக்குச் சுற்றறிக்கை சென்னை மாநகராட்சி அனுப்பியுள்ளது

கல்லூரியில் 18 வயதிற்கு மேற்பட்ட தடுப்பூசி செலுத்தாத மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் தடுப்பூசி செலுத்தி இருப்பதை 100% உறுதி செய்திட வேண்டும் என பெருநகர சென்னை மாநகராட்சி கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள், டீன்கள் மற்றும் பதிவாளர்களுக்குச் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

கல்லூரியில் தடுப்பூசி செலுத்தி இருப்பதை 100% உறுதி செய்திட வேண்டும்,Chennai Corporation circular to educational institutions to ensure 100% vaccination in college
Chennai Corporation circular to educational institutions to ensure 100% vaccination in college

By

Published : Jan 3, 2022, 8:21 AM IST

Updated : Jan 3, 2022, 8:53 AM IST

சென்னை: கரோனா தொற்று மற்றும் ஒமிக்கிரான் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கல்லூரியில் 18 வயதிற்கு மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் தடுப்பூசி செலுத்தி இருப்பதை 100% உறுதி செய்திட வேண்டும் எனச் பெருநகர சென்னை மாநகராட்சி அனைத்து கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள், டீன்கள் மற்றும் பதிவாளர்களுக்குச் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

இது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகம் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில், "18 வயதிற்கு மேற்பட்ட தடுப்பூசி செலுத்தாத படிக்கும் மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் தடுப்பூசி செலுத்தி இருப்பதை 100% உறுதி செய்ய வேண்டும்.

கல்வி நிறுவனங்களுக்கு சென்னை மாநகராட்சி சுற்றறிக்கை

தடுப்பூசி தினசரி அறிக்கையை சென்னை மாநகராட்சி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். வாரம் தோறும் நடைபெறும் தடுப்பூசி முகாமை பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்திட வேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்லூரியில் தடுப்பூசி செலுத்தி இருப்பதை 100% உறுதி செய்திட வேண்டும்

இதையும் படிங்க: கரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றாமல் மயிலாடுதுறையில் திருமணமண்டபம் திறப்புவிழா - அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு

Last Updated : Jan 3, 2022, 8:53 AM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details