சென்னை:இந்தியாவிலேயே பழமையான சென்னை மாநகராட்சி 334 ஆண்டுகள் பாரம்பரியம்மிக்கது. சென்னை மாநகராட்சியில் பெண் ஒருவர் வரும் 4ஆம் தேதி மேயராக தேர்வு செய்யப்படவுள்ளார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
அதிலும் இந்த பெருமைமிக்க மேயர் பதவியில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த பெண் அமர இருப்பது இதுவே முதல் முறை என்றும் கூறப்படுகின்றது. வருகின்ற மார்ச் 2 அன்று தேர்தலில் வெற்றிபெற்ற 200 மாமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சி சென்னை ரிப்பன் மாளிகையில் நடைபெறுகிறது.