சென்னை உயர் நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கந்தசாமி நாயுடு அறக்கட்டளைக்கு சொந்தமான 20 கிரவுண்ட் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் ஆக்கிரமிப்பு செய்த விவகாரத்தில் பெண் வழக்கறிஞரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை கொளத்தூர் பாலாஜி நகரை சேர்ந்த உயர் நீதிமன்ற பெண் வழக்கறிஞர் ரெஜிலா ஸ்ரீ என்பவர் கந்தசாமி நாயுடு அறக்கட்டளைக்கு சொந்தமாக கீழ்பாக்கம் கெல்லீஸ் சாலையில் உள்ள 20 கிரவுண்ட் இடத்தை போலி ஆவணங்கள் மூலம் ஆக்கிரமித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னை மத்திய குற்ற பிரிவில் உள்ள நில மோசடி தடுப்பு பிரிவு வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கியது. இந்த விசாரணையில் அந்த 20 கிரவுண்ட் இடத்திற்கு அருகாமையில் தனது பெயரில் நிலம் இருப்பதாக கூறியும், அந்த நிலம் தனது பூர்வீக சொத்து என்று கூறியும், அதற்கேற்ப போலி ஆவணம் தயாரித்து கடந்த 2017ஆம் ஆண்டு ஆக்கிரமிப்பு செய்தது தெரியவந்தது.