சென்னையில் தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மேலும் இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரை முழு ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் சென்னையில் சில பகுதிகளில் இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபடுவதாகக் குற்றசாட்டு எழுந்தது.
குறிப்பாக, பெரம்பூரில் உள்ள முரசொலி மேம்பாலத்தில் கடந்த ஜூன் 10ஆம் தேதி அதிகாலையில் 15க்கும் அதிகமான இளைஞர்கள் பைக் ரேஸில் ஈடுபட்டதாக, அந்தப் பகுதிவாசிகள் காவல் துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.