தமிழ்நாடு

tamil nadu

லிப்ட் கேட்பது போல் வாகனம் பறிப்பு: மர்ம நபருக்கு வலைவீச்சு!

By

Published : Dec 4, 2019, 2:51 PM IST

சென்னை: லிப்ட் கேட்பது போல் நடித்து கத்தியால் தாக்கி இருசக்கர வாகனத்தை பறித்து சென்ற மர்ம நபரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

Chennai bike theft, police serching the theif
Chennai bike theft, police serching the theif

சென்னை புரசைவாக்கம் திடீர் நகரைச் சேர்ந்தவர் மணிவண்ணன்(21). இவர் தானா தெருவில் உள்ள இருசக்கர வாகன ஒர்க் ஷாப்பில் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் மணிவண்ணன் நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் தனது நண்பனை அழைத்து கொண்டு கீழ்ப்பாக்கம் பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டு ராஜரத்தினம் தெரு வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது, மர்ம நபர் ஒருவர் மணிவண்ணனிடம் லிப்ட் கேட்டுள்ளார். அப்போது பைக்கை நிறுத்தியவரிடம் அவரை, கத்தியால் தாக்கி இருசக்கர வாகனத்தைப் பறித்துச் சென்றுள்ளார்.

கத்தியால் தாக்கப்பட்டதில் பலத்த காயமடைந்த மணிவண்ணனுக்கு தலையில் 7தையல் போடப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள கீழ்பாக்கம் காவல் துறையினர், மர்ம நபரை தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க...தந்திரங்கள் சூழ்ந்த சமகால அரசியல்!

ABOUT THE AUTHOR

...view details