தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அய்யப்பாக்கத்தில் ஒரு டன் எடையுள்ள குட்கா பறிமுதல்! - chennai gutka seized

சென்னை: அய்யப்பாக்கத்தில் ஒரு டன் எடையுள்ள ரூ. 7 லட்சம் மதிப்பிலான குட்கா பொருள்களைக் காவல் துறையினர் பறிமுதல்செய்தனர்.

police
police

By

Published : Sep 3, 2020, 8:42 AM IST

சென்னை ஆவடி அடுத்த அய்யப்பாக்கம் வீட்டுவசதி வாரிய குடியிருப்புப் பகுதியில் ஒரு வீட்டில், தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருள்களைப் பதுக்கிவைத்து விற்பனை செய்வதாக ஆவடி காவல் உதவி ஆணையர் சத்தியமூர்த்திக்கு ரகசிய தகவல் வந்தது.

இதனையடுத்து திருமுல்லைவாயல் காவல் துறை ஆய்வாளர் புருஷோத்தமன் தலைமையில், காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று தீவிர விசாரணை நடத்தினர். தொடர்ந்து காவல் துறையினர் சம்பந்தப்பட்ட வீட்டுக் கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று சோதனை செய்தபோது, குட்கா பொருள்கள் மூட்டை மூட்டையாகப் பதுக்கிவைத்திருப்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து அங்கிருந்த ஒரு டன் எடையுள்ள ரூ.7 லட்சம் மதிப்பிலான குட்காவை காவல் துறையினர் பறிமுதல்செய்தனர். மேலும், நடத்திய விசாரணையில், சிவகங்கை மாவட்டத்தைச் சார்ந்த முருகேசன் (45) என்பவர் குடியிருப்புப் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு வாங்கி குடும்பத்துடன் ஆரம்பத்தில் வசித்துவந்துள்ளார்.

பின்னர், குடும்பத்தினரை வேறொரு வீட்டில் தங்கவைத்துவிட்டு அந்த வீட்டை குடோனாக மாற்றி குட்காவை பதுக்கிவைத்து விற்பனை செய்துவந்தது தெரியவந்தது.

இதன் பிறகு பறிமுதல்செய்த குட்காவை காவல் நிலையம் கொண்டுவந்து வைத்துள்ளனர். மேலும், புகாரின் அடிப்படையில் திருமுல்லைவாயல் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள வியாபாரி முருகேசனைத் தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க:கொலை வழக்கில் 6 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நபர் கைது

ABOUT THE AUTHOR

...view details