சென்னை விமான நிலையத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்துசெல்கின்றனர். இந்நிலையில் விமான நிலையத்தின் முதல் தளத்தில் செல்கைப் பகுதியில் உள்ள கழிவறை பராமரிப்பு இன்றி காணப்படுகிறது. கழிப்பறைக்குள் கதவுகள், தண்ணீர்க் குழாய்கள் என அனைத்தும் சேதமாகியும், அசுத்தமாகவும் உள்ளன.
விமான நிலையத்தின் பல பகுதிகளில் புதிய கட்டுமான பணிகள் நடந்துவருகின்றன. ஆனால் ஏற்கனவே கட்டி முடிக்கப்பட்ட பொதுமக்கள் கழிவறை பராமரிப்பின்றி இருப்பது குறித்து விமான நிலைய ஊழியர்கள் கண்டுகொள்வதில்லை.