சென்னை: உலகம் முழுவதும் விமான பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இந்தியாவில் இருந்து சுற்றுலா மற்றும் வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கையும், மற்ற நாடுகளில் இருந்து சொந்த ஊருக்கு வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அதற்கேற்ப விமான சேவைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் நாடு முழுவதும் விமானம் மூலம் கோடை விடுமுறை முன்னிட்டு உள்நாடு மற்றும் வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்வோர் மற்றும் சொந்த ஊருக்கு வருவோரின் முன் பதிவு அதிகரித்துவருகிறது. கோடை விடுமுறைக்கான விமான டிக்கெட்டுகள் பாதிக்கு மேற்பட்டவை விற்று தீர்ந்து விட்டன.
அதன் காரணமாக வெளிநாடு மற்றும் உள்நாட்டு விமான டிக்கெட்களின் விலையும் அதிகரித்துள்ளது. இந்தாண்டு ஏப்ரல் - மே மாதத்தில் சென்னையில் இருந்து கோவா செல்வதற்கு 4500 - 6000 ரூபாய் வரை விமான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த டிக்கெட் கட்டணம் இது மார்ச் மாத முன்பதிவு விலையை விட அதிகமாக இருக்கிறது.
ஏப்ரல் மாதத்தில் விமான பயணம் மேற்கொள்பவர்களுக்கு சென்னையில் இருந்து கோவா செல்ல ரூ.4,400 ஆகவும், டெல்லிக்கு ரூ.4000 - ரூ.5000 வரையும், மதுரைக்கு ரூ.3500 - ரூ.4500 வரையும் துபாய்க்கு ரூ.25,000 - ரூ.35,000 ஆயிரம் வரை டிக்கெட் கட்டணம் உயர்ந்துள்ளது.