சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய ஆணையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் பொங்கல் முதல் நாள் போகி பண்டிகை கொண்டாடுவது வழக்கம். போகி பண்டிகையின்போது பழைய பொருள்கள் எரித்ததால் 2018ஆம் ஆண்டு கடுமையான புகை ஏற்பட்டது. இதனால் 118 விமானங்கள் புறப்பாடு, வருகை சேவை பாதிக்கப்பட்டன.
கடந்த மூன்று ஆண்டுகளாக விமான நிலைய ஆணையகத்தின் வேண்டுகோளுக்கிணங்க ஒரளவு விமான போக்குவரத்து பாதிப்பு இல்லாமல் இயக்கப்பட்டது.