தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு பொதுத்தேர்வு மாநில அளவில் தயார் செய்யப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 11 ஆம் தேதி தொடங்கிய அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 23 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வேதியியல் தேர்வு இன்று நடைபெற்றது.
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வேதியியல் வினாத்தாள் சமூக வலைத்தளங்களில் நேற்றே பரவியது. ஆனால் அந்த வினாத்தாள் வெளியாகி இருக்க வாய்ப்பு இல்லை என கல்வித்துறை அலுவலர்கள் மறுத்தனர். ஆனால் ஹலோ அப்ளிகேஷனில் வெளியான வினாத்தாளும் தற்பொழுது நடைபெற்ற வேதியியல் தமிழ் மொழி வினாத்தாளும் ஒரே மாதிரியாக உள்ளது.