தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நுழைவுக்கட்டணம் வசூலிப்பது உழவர் சந்தைக்கான நோக்கத்தையே சிதைக்கும்: உயர்நீதிமன்றம் - சென்னை மாவட்ட செய்தி

காருவள்ளி வாரச்சந்தைக்கு கொண்டு வரும் கரும்பு டிராக்டர்களுக்கு தலா 1,500 ரூபாய் நுழைவுக் கட்டணம் வசூலிப்பது உழவர் சந்தை அமைக்கப்பட்டதற்கான நோக்கத்தையே சிதைத்துவிடும் என சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Apr 28, 2023, 3:01 PM IST

சென்னை: சேலம் மாவட்டத்தில் உள்ள காருவள்ளி கிராமத்தில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில், வாரச்சந்தை நடத்தப்படுகிறது. 50 ஆண்டுகளாக நடந்து வரும் இந்த வாரச் சந்தைக்கு விவசாயப் பொருட்களையும், கால்நடைகளை விற்கவும், வாங்கவும் வருவோரிடம் ஒப்பந்ததாரர் நுழைவுக் கட்டணம் வசூலித்து வருகிறார்.

கால்நடைகளுக்கு தலா நூறு ரூபாயும், 30 கிலோ காய்கறிகளுக்கு 50 ரூபாயும், கரும்பு ஏற்றி வரும் டிராக்டர்களுக்கு தலா ஆயிரத்து 500 ரூபாயும் நுழைவுக் கட்டணம் வசூலிப்பதாகக் கூறி, சீனிவாசன் என்ற விவசாயி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

அவர் தொடர்ந்துள்ள வழக்கில், அதிக நுழைவுக் கட்டணம் வசூலிப்பது குறித்து அரசு அலுவலர்களுக்கு புகார் மனு அளித்தும், பரிசீலிக்கப்படவில்லை எனவும், நுழைவுக் கட்டணத்துக்கு ரசீது வழங்கப்படுவதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு பொறுப்புத் தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரதச் சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தெரிவிக்கும் குற்றச்சாட்டுக்களுக்கு எந்த ஆதாரங்களும் இல்லை என அரசு பிளீடர் முத்துகுமார் தெரிவித்தார்.

இதையடுத்து, விவசாயிகளிடம் ஆயிரத்து 500 ரூபாய் நுழைவுக் கட்டணம் வசூலிப்பது, உழவர் சந்தை நடத்துவதற்கான நோக்கத்தையே சிதைத்து விடும் என நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். மனுதாரரின் புகார் மனுவை இரண்டு வாரங்களில் பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க சேலம் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டனர்.

மேலும், உழவர் சந்தைக்கு வரும் விவசாயிகளிடம் நியாயமான நுழைவுக்கட்டணம் வசூலிப்பதையும், ரசீது வழங்குவதையும் உறுதி செய்ய வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: Ponniyin Selvan 2: பறை, செண்டை மேளம் முழங்க சோழர்களை வரவேற்ற ரசிகர்கள்!

ABOUT THE AUTHOR

...view details