தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும்! - அதிகாலையில் பனிமூட்டம் நிலவும்

தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வறண்ட வானிலை
வறண்ட வானிலை

By

Published : Feb 15, 2023, 2:19 PM IST

சென்னை:வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும் (பிப்.15), நாளையும் (பிப்.16) பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட, 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும். அதிகாலையில் லேசான பனிமூட்டத்துக்கு வாய்ப்புள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பிப்.17ம் தேதி முதல் பிப்.19ம் தேதி வரை, வறண்ட வானிலை நிலவும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 20-21 செல்சியஸ் என்ற அளவில் இருக்கக்கூடும். அதிகாலையில் லேசான பனிமூட்டத்துக்கு வாய்ப்புள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மழை பதிவாகவில்லை. மீனவர்களுக்கு எச்சரிக்கை ஏதுமில்லை.

வறண்ட வானிலை தொடர்பாக, "இன்னும் ஓரிரு நாட்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து பனியின் தாக்கம் குறையும். பகல் நேரங்களில் முன்பை விட வெப்பத்தின் தாக்கம் அதிகளவில் காணப்படுகிறது. இரவு நேரங்களில் காற்றின் வேகம் குறைவாக காணப்படுகிறது. இனி வரும் காலங்களில், காற்றின் வேகம் அதிகரிக்கும். அதன் மூலம் பனியின் தாக்கம் குறைய வாய்ப்புள்ளது" என சென்னை வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க: நெல்லையில் வழக்கறிஞருக்கு ஓட ஓட அரிவாள் வெட்டு!

ABOUT THE AUTHOR

...view details