கரோனா வைரஸ் தொற்றை தடுக்க மத்திய அரசு ஊரடங்கு உத்தரவு, மாநில அரசு 144 தடை உத்தரவு என பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. இதில் பால், மருந்து, மளிகை போன்றவற்றை தடையின்றி விற்க அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு அரசின் சமூக விலகல் அறிவுத்தலால் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வருபவர்களிடம் சட்டத்தை அமல்படுத்துகிறோம் என்ற பெயரில் காவல்துறை கடுமையாக நடந்துகொள்வதாக வழக்கறிஞர் எம்.எல். ரவி மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், 21 நாட்கள் ஊரடங்கு காரணமாக தினக்கூலிகள், தெரு வியாபாரிகள், வெளி மாநிலங்களிலிருந்து பணிக்கு வந்த தொழிலாளர்கள் தங்களுடைய அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்துகொள்ள முடியாமல் தவிப்பதாக மனுவில் கூறியுள்ளார்.