தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான நிலத்தில் கட்டடம் கட்ட கோரிய வழக்கு தள்ளுபடி! - Dismissal of the case seeking construction of the building on land owned by Dharmapuram Aadeenam

சென்னை: தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான நிலத்தில் வணிக நோக்கில் கட்டடம் கட்ட தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

chennai high court
chennai high court

By

Published : Jan 9, 2021, 3:37 PM IST

மயிலாடுதுறை மாவட்டம், தருமபுரத்தில் அமைந்துள்ள சைவ சமய அறக்கட்டளையான தருமபுரம் ஆதீனம் அமைந்துள்ளது. இந்த ஆதின மடத்துக்கு சொந்தமாக திருக்கடையூரில் 14 ஆயிரம் சதுர அடியில் இருந்த திருமண மண்டபம், சிதிலமடைந்த நிலையில் இருந்துள்ளது. இந்த இடத்தின் குத்தகைதாரர், நிலத்தை காலி செய்து கொடுத்த பின், அங்கு மூன்று மாடி கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.

அறக்கட்டளை நிலத்தில் வணிக நோக்கில் பயன்படுத்தப்படுவதாக சென்னையைச் சேர்ந்த சுந்தர் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பான வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

தருமபுரம் ஆதீன மடம், அறப்பணிகளில் அக்கறை காட்டாமல் வருவாய் திரட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும், அனுமதியின்றி இந்த கட்டடம் கட்டுவதற்கு மடத்துக்கு தடை விதிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, இந்திய அரசியலமைப்பு சட்டப்படி, மடம் என்பது அரசமைப்பு என்பதை மனுதாரர் நிரூபிக்கவில்லை என்பதால், இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல எனக் கூறி, இவ்வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். அதேசமயம், இந்த விவகாரம் தொடர்பாக உரிமையியல் வழக்கு தொடர, இந்த உத்தரவு தடையாக இருக்காது என்றும் தலைமை நீதிபதி அமர்வு தெளிவுப்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:கூட்டணி! இபிஎஸ் - ஓபிஎஸ்க்கு அதிகாரம்

ABOUT THE AUTHOR

...view details