சென்னை: ஓட்டேரி பகுதியைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி (55). அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபாவதி (62).
இரண்டு பேரும் அண்ணாநகர் டிபிளாக் பகுதியில் நேற்று நடந்து சென்றனர். அப்போது பைக்கில் வந்த அடையாளம் தெரியாத 2 பேர் விஜயலட்சுமி கழுத்தில் கிடந்த 3 சவரன் தங்க நகையைப் பறித்து கொண்டு ஓடி விட்டனர்.
அதைப்போல பிரபாவதி கழுத்தில் கிடந்த 5 சவரன் தங்க நகையையும் பறித்துக்கொண்டு ஓடி விட்டனர். இது தொடர்பாக அண்ணாநகர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.