சென்னை: கிழக்கு தாம்பரம் கணபதிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மீன் வியாபாரி ரங்கராஜன் (71). இவர் தனது நண்பரின் வீட்டிற்குச் செல்வதற்காக, தாம்பரம் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் சென்ற மூன்று அடையாளம் தெரியாத நபர்கள் முதியவரை மிரட்டி செல்போன், பணம் கேட்டுள்ளனர். ரங்கராஜன் தர மறுத்ததால் அடையாளம் தெரியாத நபர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த பீர் பாட்டிலால் முதியவரை முதுகில் அடித்துள்ளனர்.
இதையடுத்து முதியவரிடமிருந்து 2,500 ரூபாய் பணம், 10 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். இதுகுறித்து முதியவர் ரங்கராஜன் தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.