சென்னை: பெரம்பூரில் உள்ள ஐ.சி.எஃப் தொழிற்சாலையில் முதன்மை பொறியாளராக பணியாற்றிவந்தவர் காத்பால். இவர் தனது பதவியிலிருந்து கடந்த மார்ச் 31ஆம் தேதி ஓய்வு பெற்றார். இவர் சென்னையிலுள்ள தனியார் நிறுவனங்களிடம் லஞ்சம் வாங்கிக்கொண்டு டெண்டர் பெற்று தந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. 2019ஆம் ஆண்டு முதல் பதவி ஓய்வு பெறும் வரை 5 கோடிய 89 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக கூறப்படுகிறது.
அதனடிப்படையில் காத்பால் மீதும், அதில் தொடர்புடைய தனியார் நிறுவனங்களின் இயக்குநர் உள்பட நான்கு பேர் மீதும் சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த மொத்த லஞ்சத்தின் முதல் தவணையாக 50 லட்சம் ரூபாயை சென்னையை சார்ந்த தனியார் நிறுவன இயக்குனரின் டெல்லியில் இருக்கும் பங்குதாரர் மூலம் அங்குள்ள காத்பாலின் சகோதரரிடம் ஒப்படைக்கப்பட்டதும் சிபிஐ விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
2.75 கோடி ரூபாய் பறிமுதல்: