தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தற்காப்புக்கலை பயிற்சியாளரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி திட்டம் - etv news

சென்னை: பயிற்சி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதான தற்காப்புக்கலை பயிற்சியாளரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி திட்டமிட்டுள்ளனர்.

தற்காப்புக்கலை பயிற்சியாளரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி திட்டம்
தற்காப்புக்கலை பயிற்சியாளரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி திட்டம்

By

Published : Jun 10, 2021, 8:28 PM IST

சென்னை அண்ணா நகர் பகுதியில் தற்காப்புக்கலை பயிற்சி நடத்தி வந்தவர் கெபிராஜ். இவர் 19 வயது பயிற்சி மாணவி ஒருவரை நாமக்கல் மாவட்டத்திற்கு போட்டிக்காக அழைத்து சென்றுவிட்டு வரும் வழியில் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் கெபிராஜ் மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், கடந்த 30ஆம் தேதி கெபிராஜி கைது செய்யப்பட்டு வருகிற 14 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி சிறையில் அடைத்தனர். தற்போது, கெபிராஜ் மீது புகார் அளித்த மாணவி வேறு மாநிலம் என்பதாலும், குற்றம் நடந்தது நாமக்கல் மாவட்டம் என்பதால் சிரமத்தை கருத்தில் கொண்டு சிபிசிஐடிக்கு வழக்கை மாற்றம் செய்து டிஜிபி உத்தரவிட்டார்.

இந்நிலையில், வழக்கின் விசாரணையை சிபிசிஐடி தொடங்கியுள்ளனர். விசாரணை அலுவலர்களான ஆய்வாளர் லதா நியமிக்கப்பட்டுள்ளார். வருகிற 14 ஆம் தேதி வரை கெபிராஜீக்கு நீதிமன்ற காவல் வழங்கியுள்ளதால் அதற்குள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி திட்டமிட்டுள்ளனர்.

மேலும், புகார் அளித்த பெண்ணை அழைத்து விசாரணை செய்து அதை வீடியோ பதிவாகவும் எடுக்க முடிவு செய்துள்ளனர். கெபிராஜ் இதே போல் வேறு பயிற்சி மாணவிகளிடமும் பாலியல் தொல்லையில் ஈடுபட்டுள்ளாரா என்பது குறித்தும் விசாரிக்க முடிவு செய்துள்ளதாக சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சுற்றுலாத்துறையை மேம்படுத்த வல்லுநர் குழு- அமைச்சர் டாக்டர் மா. மதிவேந்தன்

ABOUT THE AUTHOR

...view details