இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் கே.ஆர். ராஜா என்பவர் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜராகி, இதேபோன்று சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து எடுத்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் வைத்த கோரிக்கை பரிசீலிக்க உத்தரவிடப்பட்டு தள்ளிவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இதையடுத்து, இந்த வழக்கில் மாநில அரசும், சிறைத் துறையும் பதிலளிக்க வேண்டும், சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து எடுத்த வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல்செய்ய வேண்டும் என உத்தரவிட்டு நீதிபதிகள் வழக்கை ஜூலை 1 ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.
சிறைக் கைதிகளுடன் வழக்கறிஞர்கள் பேச அனுமதி கோரிய வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு - lawyers
சிறைக் கைதிகளுடன் தொலைபேசி அல்லது காணொலி மூலம் வழக்கறிஞர்கள் பேச அனுமதிக்கக் கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
![சிறைக் கைதிகளுடன் வழக்கறிஞர்கள் பேச அனுமதி கோரிய வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு சிறைக் கைதிகளுடன் வழக்கறிஞர்கள் பேச அனுமதி கோரிய வழக்கு - அரசு பதிலளிக்க உத்தரவு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-12138590-1050-12138590-1623743265752.jpg)
சிறைக் கைதிகளுடன் வழக்கறிஞர்கள் பேச அனுமதி கோரிய வழக்கு - அரசு பதிலளிக்க உத்தரவு
இதையும் படிங்க:ஸ்டாலினுக்கு பத்தரை - இது டெல்லியின் ஒதுக்கீடு!