தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாடகைக்கு வாங்கிய காரை அடமானம் வைத்த 4 இளைஞர்கள் - வாடகைக்கு வாங்கிய கார் அடமானம்

காரை வாடகைக்கு வாங்கி, வேறொரு நபருக்கு அடமானம் வைத்த சட்டக்கல்லூரி மாணவர் உட்பட நான்கு பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

car-theft
car-theft

By

Published : Dec 17, 2019, 2:40 PM IST

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிபூண்டி பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (39). இவர் சொந்தமாக கார் வைத்துக் கொண்டு வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார்.

இந்தநிலையில் இவர் கடந்த 15ஆம் தேதி அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பிளசன் தாமஸ்(27), கிருபாகரன் ஆகியோர் தன்னிடம் உள்ள காரை வாடகைக்கு பெற்றுக் கொண்டு திருப்பி தராமல் இருந்ததாகவும், பின்னர் விசாரிக்கும் போது வேறொரு நபருக்கு காரை அடமானம் வைத்ததாகவும் கூறி, காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் காரை அடமானம் வைத்த பிளசன் ராஜ், ரமேஷ்(26), ரமீஸ் ராஜா(31), சட்டக் கல்லூரி மாணவர் முகுந்தன்(23) ஆகிய நான்கு பேரைக் காவல் துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க:

தேர்தல் தொடர்பான புகார்களைத் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்கள் அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details