தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"செந்தில் பாலாஜியிடம் விசாரிக்க முடியவில்லை" - நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை புலம்பல்! - ED Raid recent update

அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவரை காவலில் எடுத்து விசாரிக்க முடியவில்லை என அமலாக்கத் துறையினர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

By

Published : Jun 20, 2023, 9:36 PM IST

சென்னை:சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ், கடந்த ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி. பின் ஜூன் 28ஆம் தேதி வரை அவரை நீதிமன்ற காவலில் வைக்கச் சென்னை முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், தன்னுடைய கணவரைச் சட்டவிரோதமாக அமலாக்கத் துறையினர் கைது செய்துள்ளனர் என்று, அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தொடர்ந்தார். அம்மனுவில் அமைச்சர் செந்தில் பாலாஜியைத் தனியார் மருத்துவமனைக்கு மாற்றக் கோரி கோரிக்கை வைத்திருந்தார். அதன் அடிப்படையில் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனைக்குச் செந்தில் பாலாஜியை மாற்றச் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டிருந்தது.

அதேசமயம், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது. மேலும் அவரை அமலாக்கத்துறை காவலில் வைத்து 8 நாட்கள் விசாரிக்க அனுமதி கொடுத்துக் கடந்த ஜூன் 16ம் தேதி உத்தரவிட்டிருந்தது.

அதில், அமைச்சர் செந்தில் பாலாஜியை, கடுமையாக முறையில் மூன்றாம் தர விசாரணைகள் மேற்கொள்ளக் கூடாது என்றும், மருத்துவர்கள் அனுமதியுடன் விசாரணை செய்ய வேண்டும் என்றும். ஒருவேளை அனுமதிக்காத நிலையில் விசாரணை மேற்கொள்ளக் கூடாது என்றும். விசாரணையின் போது போதுமான இடைவெளிகள் வழங்க வேண்டும் என்றும். அமலாக்கத்துறை, மருத்துவர்களைக் கொண்டு பரிசோதனையும் செய்யலாம் என்றும். மேலும் விசாரணைக்குப் பின் உறவினர்களை அனுமதிக்க வேண்டும் என நிபந்தனைகளைச் சென்னை உயர் நீதிமன்றம் விதித்தது.

பின்னர், மீண்டும் வரும் ஜூன் 23ஆம் தேதி காணொலி காட்சி மூலமாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவின் படி, காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியிடம், அமலாக்கத்துறை சார்பில் கடந்த இரண்டு நாட்களாக விசாரணை நடத்தியதாக எந்த தகவலும் வரவில்லை.

இந்நிலையில், சென்னை முதன்மை நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு அமலாக்கத்துறை தரப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ் ஆஜராகி, அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் தற்போதைய நிலையில் விசாரணை நடத்தினால் அவருக்குத் தொந்தரவாக அமையும் என்றும், மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும் என்றும் காவிரி மருத்துவக் குழு பரிந்துரை அளித்தனர். இதன் அடிப்படையில் அமலாக்கத்துறையினர் அவரை காவலில் எடுத்து விசாரிக்க முடியவில்லை எனத் தெரிவித்தனர்.

தற்போது விசாரணை நடத்தப்படவில்லை என்றால், சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் காவல்துறை விசாரணைக்கு அனுமதி வாங்கப்பட்டு, அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் மீண்டும் விசாரணை நடத்த அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க:Senthi Balaji கைதின் போது மனித உரிமை மீறல் - அமலாக்கத்துறை இயக்குனருக்கு நோட்டீஸ்!

ABOUT THE AUTHOR

...view details