தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சரக்கு வாகனத்தில் ரகசிய அறையில் வைத்து கஞ்சா கடத்தல்: இருவர் கைது - கஞ்சா கடத்தல்

சென்னை: சரக்கு வாகனத்தில் ரகசியமாக கடத்தி வந்த கஞ்சாவை மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலர்கள் பறிமுதல் செய்துள்ளனர்.

arrest
arrest

By

Published : Jul 19, 2021, 10:08 PM IST

சென்னை மண்டல மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலர்களுக்கு கஞ்சா கடத்தல் நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில், ஊத்துக்கோட்டை - திருவள்ளூர் சாலையில் அலுவலர்கள் வாகன சோதனை மேற்கொண்டு வந்தனர்.

அப்போது அங்கு சரக்கு வாகனம் ஒன்று காலியாக வந்தது. இந்த வாகனத்தை அலுவலர்கள் மேலோட்டமாக சோதனையிட்டனர். பின் வாகனத்திற்கு உள்ளே ஏறி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது வாகனத்தினுள் ரகசிய அறை இருப்பதை கண்டுபிடித்தனர். பின் அந்த அறையை திறந்து பார்த்த போது 150 காக்கி நிற பாக்கெட்டுகளில் கஞ்சாவை ரகசியமாக கடத்தி வந்தது தெரியவந்தது. சுமார் 237 கிலோ கஞ்சா இருக்கும் என அலுவலர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து வாகன ஓட்டுநரிடம் அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டனர், விசராணையில் அவர் கொடுங்கையூரைச் சேர்ந்த டுபாஷ் சங்கர் என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டதில், ஆந்திரா அன்னாவரம் பகுதியிலிருந்து தமிழ்நாடு வழியாக கேரளா மாநிலம் திருவனந்தபுரத்துக்கு கஞ்சா கடத்த திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது.

கடத்தி வரப்பட்ட கஞ்சா

உடனடியாக அலுவலர்கள் டுபாஷ் சங்கர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அதன் பின் டுபாஷ் சங்கர் கொடுத்த தகவலின் அடிப்படையில், தமிழ்நாடு - கேரள எல்லையில் கஞ்சா வாங்க காத்திருந்த நபர் குறித்து கொச்சின் மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அலுவலர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இந்த தகவலையடுத்து அலுவலர்கள் களைக்காவல என்ற இடத்தில் கஞ்சா வாங்க காத்திருந்த ஸ்ரீநாத் என்ற நபரை கைது செய்தனர். ஸ்ரீநாத்திடம் அலுவலர்கள் முறையான விசாரணை மேற்கொண்டதில், விழிஞ்சம் பகுதியில் 4 வருடமாக வெகு விமர்சையாக கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது.

இந்த கஞ்சா கடத்தில் தொடர்புடைய இருவரிடமும் மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அலுவலர்கள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: சொகுசுக் கார்களில் கஞ்சா கடத்தல்: துப்பாக்கி முனையில் மடக்கிப் பிடித்த போலீஸ்!

ABOUT THE AUTHOR

...view details