தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 9, 2021, 7:45 AM IST

ETV Bharat / state

ஆவடியில் கஞ்சா விற்பனை: இளைஞர் கைது!

சென்னை: ஆவடியில் கஞ்சா விற்பனை செய்த இளைஞரை காவலர்கள் கைது செய்தனர்.

வினோத்
வினோத்

ஆவடியை அடுத்த பொத்தூர், கனரா வங்கி எதிரில் உள்ள காலி மைதானத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக ஆவடி டேங்க் பேக்டரி காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து ஆய்வாளர் நடராஜன் தலைமையில் காவல்துறையினர் மாறுவேடத்தில் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணித்தனர்.

அப்போது, அங்கு ஒரு இளைஞர் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்தார். அவரிடம், காவலர்கள் விசாரணை நடத்தினர். அப்போது, அவர் வைத்திருந்த பிளாஸ்டிக் பொட்டலத்தில் 2 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரிடமிருந்து கஞ்சாவை பறிமுதல்செய்து, காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

இதில், அவர் பொத்தூர், வள்ளி வேலன் நகரைச் சார்ந்த வினோத் (30) என்பது தெரியவந்தது. இவர், ஆந்திரா மாநிலத்தில் இருந்து கடத்தி ஆவடி சுற்றுவட்டார பகுதிகளில் விற்பனை செய்ய இருப்பது தெரியவந்தது.

இந்தப், புகாரின் அடிப்படையில் ஆவடி டேங்க் பேக்டரி காவல்துறையினர் அவர்மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ததோடு, அவரை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பொன்னேரி கிளை சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:துபாயிலிருந்து சென்னைக்கு 1.41 கிலோ தங்கம் கடத்தல்!

ABOUT THE AUTHOR

...view details