தமிழ்நாடு

tamil nadu

சடன் பிரேக் போட்ட ஓட்டுநர்… வடிவேல் போல் பறந்த நடத்துநர்!

By

Published : Oct 7, 2020, 4:13 PM IST

சென்னை ஆவடியில் அரசுப் பேருந்து ஓட்டுநர் திடீரென பிரேக் போட்டதால், நடிகர் வடிவேலு காமெடியில் வருவதுபோல் நடத்துநர் கண்ணாடியை உடைத்துக்கொண்டு கீழே விழுந்தார்.

சடன் பிரேக் போட்ட ஓட்டுநர்
சடன் பிரேக் போட்ட ஓட்டுநர்

சென்னை: ஆவடி அருகே அரசுப் பேருந்து ஓட்டுநர் திடீரென பிரேக் அடித்ததால், நடிகர் வடிவேலு காமெடியில் வருவதுபோல் கண்ணாடியை உடைத்துக்கொண்டு பேருந்து நடத்துனர் கீழே விழுந்தார்.

சென்னை ஆவடி காமராஜர் நகர் அருகே தடம் எண் 623 வழி சென்ற மாநகரப் பேருந்து, பூந்தமல்லி நோக்கி இன்று (அக்.07) மதியம் சென்றுகொண்டிருந்தது. அப்போது, குழந்தை ஒன்று சாலையின் குறுக்கே வந்ததால், பேருந்து ஓட்டுநர் சேகர் திடீரென 'பிரேக்' பிடித்தார்.

இதில், டிக்கெட் கொடுத்துக்கொண்டு வந்த நடத்துநர் ஆறுமுகம் (38), நிலைதடுமாறி, நடிகர் வடிவேலு பட காமெடியில் வருவதுபோல், முன்பக்க கண்ணாடியை உடைத்துக்கொண்டு கீழே விழுந்தார்.

இச்சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்காததால், பேருந்தின் கண்ணாடியை மாற்றுவதற்கு அரசிடம் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், கண்ணாடியை உடைத்துக் கொண்டு கீழே விழுந்த நடத்துநருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டதால் அவர் ஆவடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

இதையும் படிங்க: காலாவதி பேருந்துகளை பெண்கள் கழிவறையாக மாற்றும் முன்னோடி திட்டம்!

ABOUT THE AUTHOR

...view details