தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 2, 2020, 7:06 AM IST

ETV Bharat / state

புரெவி புயல்: பயிர்க்காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு வேளாண் துறை அறிவுறுத்தல்

சென்னை : தொடர்ந்து மழை பெய்யும் நாள்களில் விவசாயிகள் தங்கள் வேளாண் விளைபொருள்களை அருகில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூட கிடங்குகளில் பாதுகாப்பாகச் சேமித்துவைத்துக்கொள்ள வேண்டும் என வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது.

farmers
farmers

இது குறித்து வேளாண் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "புயல், மழைக்காலங்களில் விவசாயிகள் அதிக பாதிப்புக்குள்ளாகின்றன. நெல், தென்னை, மா, பலா உள்ளிட்ட பல்வேறு பல ஆண்டுகள் பலன் தரும் மரங்களைப் பாதுகாக்கும் வகையில் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

வருகின்ற டிசம்பர் 2, 3, 4 ஆகிய தேதிகளில் தென்மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், சம்பா நெல் பயிர் சாகுபடி செய்துள்ள அனைத்து விவசாயிகளும் தங்களுடைய பயிர்களை அருகில் உள்ள பொது சேவை மையங்களிலோ, தொடக்க வேளாண் கூட்டுறவுச் சங்கங்களிலோ அல்லது வங்கிகளிலோ உரிய காப்பீட்டுக் கட்டணத்தைச் செலுத்தி, சாகுபடி செய்ததற்கான அடங்கல், சிட்டா, ஆதார் அட்டை நகல், வங்கிக் கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகல் ஆகியவற்றை இணைத்து, இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் இழப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், கன்னியாகுமரி, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் சம்பா நெல் பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகளும், தோட்டக்கலைப் பயிர்களான வாழை, மரவள்ளி, வெங்காயம், மிளகாய், தக்காளி, வெண்டை, கொத்தமல்லி, கத்தரி, இஞ்சி போன்ற பயிர்களைச் சாகுபடி செய்துள்ள விவசாயிகளும், தங்களுடைய பயிர்க்காப்பீடு செய்வதற்கான கடைசி தேதி டிசம்பர் மாதம் 15ஆம் தேதி ஆகும்.

இருப்பினும், விவசாயிகள், 15ஆம் தேதி வரை காத்திராமல், தங்களுடைய பயிர்களைப் புயல், வெள்ளம் போன்ற இயற்கை இடர்ப்பாடுகளுக்கு முன்னதாகவே பயிர்க்காப்பீடு செய்துகொள்ள வேண்டும்" என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:மருத்துவக் கலந்தாய்வு - எட்டு மாணவர்கள் இருப்பிட சான்றிதழில் சந்தேகம்!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details