சென்னை: தாம்பரம் அடுத்த சானடோரியம் சத்யா தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக். இவரது மகன் விஷ்வா (11). இவர், ராமகிருஷ்ணபுரம் அரசுப் பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், நேற்று சனிக்கிழமை விடுமுறை என்பதால் மாலை வேளையில் சானடோரியம் மேம்பாலம் அருகே, தனியார் பள்ளிக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ள ரயில்வே இடத்தில் விஷ்வா நண்பர்களுடன் விநாயகர் சதூர்த்தியை கொண்டாடுவதற்கு எருக்கம் பூ பறிக்கச் சென்றுள்ளார்.
அப்போது அங்கு மழை நீர் தேங்கி நின்ற பள்ளத்தில் மீன்கள் இருக்கிறதா என்று எட்டி பார்த்தபோது சிறுவன் தவறி விழுந்துள்ளார். நீரில் விழுந்த அவர் சேற்றில் சிக்கியதால், அதிர்ச்சியடைந்த சக நண்பர்கள் கூச்சலிட்டபடி அப்பகுதியில் இருந்தவர்களிடம் தெரிவித்துள்ளனர்.