கடந்த 2014இல் சிவகங்கை மாவட்டம், நாச்சியார்புரம் பகுதியில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் பண்ணை வீட்டின் அருகே பைப் வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இது தொடர்பாக க்யூ பிரிவு காவல் துறை வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்திவந்தனர்.
இதில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த திருசெல்வம் என்ற முரசு, கலை என்ற காளைலிங்கம், தங்கராஜ் என்ற தமிழ் அரசன், கவியரசன் என்ற ராஜா, ஜான் மார்ட்டின் என்ற ஜான், கார்த்திக் என்ற ஆதி ஆகிய ஆறு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.