சென்னை: கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தில் வாகனம் நிறுத்தம் வளாகம் உள்ளது. இதன் அருகே உள்ள மரத்தின் அடியில் தலை தனியாகவும் உடல் தனியாகவும் அடையாளம் தெரியாத ஆண் சடலம் இருப்பதாக அப்பகுதி மக்கள் கோயம்பேடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற கோயம்பேடு போலீசார் விசாரணை செய்தனர். அழுகிய நிலையில் சடலம் கிடந்த இடத்தின் அருகே பீர் பாட்டில், சிப்ஸ் பாக்கெட், ஒரு கயிறு ஆகியவை இருந்து உள்ளன.