மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு முழுவதும் 38 தொகுதிகளில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் சந்தித்து வாழ்த்துகள் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு சமூக நீதிக்கான மண் என்பதை இந்த வெற்றி நிரூப்பித்துள்ளது. இதை தமிழக வாழ்வுரிமை கட்சி மனதார வரவேற்கிறது என்றார்.