தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'தண்ணீர் பிரச்னைக்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை தேவை' - Chennai

சென்னை: தண்ணீர் பிரச்னைக்கு போர்க்கால அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு பாஜக தலைவர் தமிழிசை வலியுறுத்தியுள்ளார்.

tamilsai

By

Published : Jun 18, 2019, 10:35 AM IST

இது குறித்து தமிழிசை சென்னை விமான நிலையத்தில் இன்று காலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, பாஜக அகில பாரத செயல் தலைவராக, ஜே.பி. நட்டா அறிவிக்கப்பட்டு அவர் இன்று பொறுப்பேற்க உள்ளதாகவும், அவருக்கு வாழ்த்து சொல்வதற்காக தற்போது டெல்லி பயணிப்பதாகவும், அவரின் அரசியல் அனுபவம், பாஜக கட்சிக்கு உறுதுணையாக இருக்குமெனவும் அவர் தெரிவித்தார்.

தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி
மேலும், தண்ணீர் சிக்கல் தீர்க்கப்பட வேண்டிய பிரச்னை எனக் கூறிய அவர், போர்க்கால அடிப்படையில் அரசு இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இஸ்ரேல் நாட்டில், நடமாடும் - கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தைப் போல், அத்திட்டத்தை இங்கும் நடைமுறைபடுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். குடிநீர் பிரச்னை குறித்து ஸ்டாலின் பேசுவதற்கு எந்தவித தார்மீக உரிமையும் இல்லை என ஆவேசமாகக் கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details