பாஜகாவின் மாநில செயற்குழு கூட்டம் சென்னையில் உள்ள கமலயத்தில் நேற்று (ஆகஸ்ட் 24) நடைபெற்றது. இதில் சென்னை மற்றும் 12 கோட்டங்களில் காணொலி காட்சி வாயிலாக, ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதில், மத்திய அரசின் ஓராண்டு சாதனை குறித்து தீர்மானத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தேசியத்திற்கும் தெய்வத்திற்கும் எதிராக செயல்படும் திமுகவை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஓபிசி இட ஒதுக்கீடு குறித்து திமுக பொய் பரப்புரை செய்ததாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கரோனா காலத்தில் முன்களப் பணியாளர்களாக இருந்தவர்களுக்கு நன்றி தெரிவித்தும், தேசிய கல்விக் கொள்கை குறித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.