தர்மபுரி: பாப்பாரப்பட்டியில் உள்ள பாரதமாதா நினைவாலயத்தில் அத்துமீறி நுழைந்த புகாரில் தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் கே.பி. ராமலிங்கம் கடந்த 14ஆம் தேதி பாப்பாரப்பட்டி போலீசாரால் கைது செய்யப்பட்டார். தற்போது நீதிமன்ற காவலில் தமக்கு ஜாமீன் வழங்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
அதில் தாம் எந்த தவறும் செய்யாத நிலையில், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, தம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று (ஆக. 24) நீதிபதி சதிஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்த போது அவர், கே.பி. ராமலிங்கத்திற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.