தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முன்னாள் தலைவர்கள் பற்றி அவதூறு : பாஜக ஆதரவாளர் கிஷோர் கே சாமி அதிரடி கைது! - latest news

சென்னை: முன்னாள் தலைவர்கள் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்களைப் பரப்பிய யூ- டியூபர் கிஷோர் கே சாமி அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

பாஜக ஆதரவாளர் கிஷோர் கே சாமி அதிரடி கைது!
பாஜக ஆதரவாளர் கிஷோர் கே சாமி அதிரடி கைது!

By

Published : Jun 15, 2021, 3:12 AM IST

யூ- டியுபர் கிஷோர் கே.சாமி தனது சமூக வலைதளப்பக்கத்தில் முன்னாள் முதல்வர்களை பற்றி இழிவுப்படுத்தும் விதமாக கருத்துகளை பதிவிட்டு வந்தார். இவை சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

கடந்த 10ஆம் தேதி காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் ரவிசந்திரன், சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் கே.கே. நகரில் வீட்டில் வைத்து கிஷோர் கே.சாமியை நேற்று (ஜூன். 14) அதிகாலையில் கைது செய்தனர்.

கைதான கிஷோர் மீது 153 கலகம் செய்ய தூண்டி விடுதல், 505 (1) (b) பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல், 505(1)(c)- ஒரு சமூகத்தை இன்னொரு சமூகத்திற்கு எதிராக குற்றச்செயலை தூண்டும் வகையில் பேசுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

காவல்துறையினர் கிஷோரை தாம்பரம் நீதிமன்ற நடுவர் அனுபிரியா முன்பு வைத்தனர். வருகிற ஜூன் 28 ஆம் தேதி சிறையில் அடைக்க தாம்பரம் நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர், மாதவரத்தில் உள்ள வீட்டிற்கு கொண்டுச் சென்று ஆஜர் படுத்தினர்.

முன்னதாக, கிஷோர் கே.சாமிக்கு அரசு மருத்துவமனையில் கரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது. சிறையில் அடைக்க சைதாப்பேட்டை கிளை சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். பிறகு கிளைச்சிறையிலிருந்து செங்கல்பட்டு சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

கடந்த நவம்பர் 30ஆம் தேதி கிஷோர் கே.சாமி தனது டிவிட்டர் பக்கத்தில் அம்பேத்கர் குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவித்ததார். இதனால், அவரை தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யக்கோரி விடுதலை சிறுத்தை கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னியரசு சைபர் கிரைம் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.

அதேபோல, கடந்த 2019 ஆம் ஆண்டு பெண் பத்திரிகையாளர்கள் பற்றி அவதூறாகவும், கீழ்தரமாக சமூக வலைதளங்கில் பதிவிட்டு வருவதாகவும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அது தொடர்பாக சென்னை ஒன்றிய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல்துறையினர் கிஷோர் கே.சாமி மீது 2019ஆம் ஆண்டு 354(டி), பெண் வன்கொடுமை சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். ஆனால், சிறைக்கு செல்லாமல் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று தப்பி விட்டார்.

கடந்த 2020 ஆம் ஆண்டில் மீண்டும் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து தொடர்ந்து அவதூறு பரப்பி வந்ததாக சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணைக்காக நேரில் அழைத்தனர். விசாரணைக்கு பிறகு கைது செய்யப்படவில்லை. ஆனால், விடுவிக்கப்பட்டார். இதற்கு சமூக செயற்பாட்டாளர்கள் பெரும் கணண்டனத்தை பதிவு செய்தனர்.

இந்நிலையில் கிஷோர் கே.சாமி மீதான தமிழ்நாடு முழுவதும் உள்ள புகார்களை உளவுத்துறை உதவியுடன் காவல்துறை தூசி தட்டி நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: உ.பி - 150 அடி ஆழ்துளை கிணற்றில் தவறிவிழுந்த குழந்தையை மீட்கும் பணி தீவிரம்!

ABOUT THE AUTHOR

...view details