தமிழ்நாடு

tamil nadu

பாஜகவுடன் கூட்டணி தொடரும்: ஓபிஎஸ் - இபிஎஸ் கூட்டறிக்கை

சென்னை: பாஜகவுடனான கூட்டணி தொடரும் என்று ஓ. பன்னீர்செல்வமும், பழனிசாமியும் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.

By

Published : Jul 7, 2021, 8:08 PM IST

Published : Jul 7, 2021, 8:08 PM IST

dfas
dfas

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக அடைந்த தோல்விக்கு பாஜகவுடன் கூட்டணி வைத்ததுதான் காரணம் என்று முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் பேசியிருந்தார். இதற்கு பாஜகவின் மாநில பொதுச்செயலாளர் கே.டி. ராகவன், அதிமுகவின் செயல்பாடுதான் தோல்விக்கு காரணம் என பதிலளித்திருந்தார்.

இந்நிலையில், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் இணைந்து அதிமுக - பாஜக கூட்டணி குறித்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நேரத்தில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் ஆட்சியை இழந்திருந்தாலும் மக்களின் பேரன்பு தொடர்கிறது.

2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு அமைக்கப்பட்ட கூட்டணி தொடர்கிறது. நாம் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் உறுதுணையாய் இருந்து தமிழ்நாட்டின் உயர்வுக்கு என உழைப்போம் என்பதில் எவ்வித ஐயமும் எழ தேவையில்லை என்பதை உறுதிபட தெரிவித்துக்கொள்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details